நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களிலேயே கிடுகிடுவென முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்ந்தவர் நடிகர் டொவினோ தாமஸ். மின்னல் முரளி, தள்ளுமால, 2018 என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரது நடிப்பில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஐடென்டிட்டி என்கிற திரைப்படம் வெளியானது. திரிஷா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தை இரட்டை இயக்குனர்கள் அகில்பால் அனாஸ்கான் இருவரும் இயக்கியிருந்தனர். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக வெளியாகி வெற்றியை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் டொவினோ தாமஸும் படத்தின் வில்லனாக நடித்த வினய் ராயும் கிளைமாக்ஸில் ஆகாயத்தில் பறக்கும் ஹெலிகாப்டர் ஒன்றில் மோதிக் கொள்ளுவது போன்று இடம் பெற்ற பத்து நிமிட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இதே போன்று ஒரு ஹெலிகாப்டரில் வந்து சென்றால் தான் நன்றாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளரிடம் நாயகன் டொவினோ தாமஸ் வற்புறுத்தினார் என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக கூடுதல் சம்பளம் கேட்டு தயாரிப்பதற்கு சுமை ஏற்படுத்தினார் என்றும் மலையாள திரை உலகை சேர்ந்த இயக்குனர் வினு கிரியத் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜூ மல்லையா என்பவர் சம்பந்தப்பட்ட இயக்குனரின் குற்றச்சாட்டை மறுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “டொவினோ தாமஸ் இப்படி ஹெலிகாப்டரில் தான் புரமோஷன் செய்வேன் என்று ஒருபோதும் கூறியது இல்லை. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் இப்படி ஹெலிகாப்டரில் புரமோஷன் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய தகவல் தான் இந்த மாதிரி வேறு விதமாக திரித்து கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த படத்திற்கு ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கிய டொவினோ தாமஸ் மீதி பணம் முழுவதையும் படம் வெளியீட்டுக்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக கூறி எங்களுக்கு உதவினார். ஏனென்றால் படத்திற்கு இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர் நன்றாகவே அறிந்து இருந்ததால் இந்த உதவியை தானாகவே முன் வந்து செய்தார். அதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு எதுவும் உண்மை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.