முதன்முறையாக மலையாள படத்திற்கு இசையமைத்துள்ள சங்கர், எஷான், லாய் | 'மாநாடு' படத்தில் நடிக்க மறுத்தேன் ; சிவகார்த்திகேயன் சொன்ன புது தகவல் | மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ஆசை'யுடன் வெள்ளித்திரைக்கு திரும்பும் கதிர் | கார் பயணத்தின் போது 20 வருடங்களாக இந்த இரண்டு விஷயங்களை கவனமாக தவிர்க்கும் விவேக் ஓபராய் | 'யாக்கைத் திரி, காதல் சுடர்', பாடலுடன் வீடியோ பதிவிட்ட மிருணாள் தாகூர் !! | விமர்சனங்களை மீறி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற நயன்தாரா | தோழியின் பிடியிலிருந்து கணவரை மீட்க பாடுபடும் நடிகை | சங்கே முழங்கு, தனி ஒருவன், தலைவன் தலைவி - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் பட சாயலில் வெளிவந்த நடிகர் ரவிச்சந்திரனின் திரைப்படம் | நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் |

பாலிவுட்டில் கடந்த வாரம் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த சாவா என்கிற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறை தழுவி வரலாற்று படமாக இது உருவாகி இருந்தது. சாம்பாஜி மன்னனாக விக்கி கவுசலும் அவரது மனைவி ஏசுபாயாக ராஷ்மிகாவும் நடித்திருந்தனர். லக்ஷ்மன் உடேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சத்ரபதி சிவாஜியின் 395வது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியின் வரலாற்றை பற்றி, அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் பற்றி உருவாகி இருக்கும் சாவா திரைப்படத்திற்கு வரி விளக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமரிந்துள்ளனர்.
அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் பாடல் டீசர் ஒன்றில் சாம்பாஜி மன்னன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சி இடம் பெற்றது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அந்த காட்சியை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டிய இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு கடுமை காட்டிய நிலையில் தற்போது இன்னொரு மாநிலமான மத்திய பிரதேச அரசு இந்த படத்திற்கு வரி விளக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




