கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம் மற்றும் தயாரிப்பு என பிசியாக இருக்கும் அவர் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக அவரின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‛‛எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை தனுஷ் எடுத்துள்ளதால், அடுத்து நடிகர் தனுஷ் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.