‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம் மற்றும் தயாரிப்பு என பிசியாக இருக்கும் அவர் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக அவரின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‛‛எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை தனுஷ் எடுத்துள்ளதால், அடுத்து நடிகர் தனுஷ் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.