ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு 'மதராஸி' என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ''இந்த 'மதராஸி' படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும். வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள். அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,'' என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.