டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நாயகியாக மாறிவிட்டார். விக்கி கவுசல் உடன் இவர் நடித்துள்ள ‛சாவா' படம் இன்று(பிப்., 14) வெளியாகி உள்ளது. மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கையை தழுவி சரித்திர படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணி ஏசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். பொதுவாகவே ராஷ்மிகாவிற்கு நேஷனல் கிரஷ் என்ற அடைமொழி உள்ளது. ஆனால் இந்த பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவாவது என்கிறார்.
இதுபற்றி ராஷ்மிகா கூறுகையில், ‛‛சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது, அது வெறும் பெயர்கள் மட்டுமே. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளை என் இதயத்திற்கு அருகில் வைத்துள்ளேன். அதை நம்பி படங்களில் நடிக்கிறேன். ரசிகர்களின் அன்பை எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். தென்னிந்தியா, வட இந்தியாவில் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கடினமாக உள்ளது. அதேசமயம் அவர்களின் அன்புக்காக நான் எனது தூக்கத்திற்கு பாய் சொல்கிறேன்'' என்றார்.




