'கூலி' பற்றி ஆமிர்கான் எதுவுமே பேசவில்லை: அவர் தரப்பு விளக்கம் | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு |
தமிழில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி, ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தை இயக்கி 1000 கோடிக்கும் அதிகமான வசூல் பெறக் காரணமாக இருந்தார். அவரது இயக்கத்தில் பல பாலிவுட் நடிகர்கள் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனும் சம்மதித்துவிட்டார் என்றார்கள். இதனிடையே, படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பட்ஜெட்டை முடித்து பார்த்த போது 400 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. சல்மான் கான் நடித்தால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்து வசூலைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.
அட்லி - அல்லு அர்ஜுன் சந்திப்பு கடந்த வருடமே நடந்தது. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்தன. பின்னர் அதிலிருந்து அல்லு அர்ஜுன் பின்வாங்கிவிட்டார். தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அட்லியின் இயக்கத்தில் நடிக்கப் போவது சல்மானா, அல்லுவா என்பது விரைவில் தெரிந்துவிடும்.