எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

நடிகர் சிலம்பரசன் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரின் மூன்று படங்களின் அப்டேட் வெளியானது. அதில் ஒன்று தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவரது 50வது படமாக நடிக்கிறார். இந்த படத்தை அவரது ஆட்மேன் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரிக்கிறர்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஸ்பேஸ் தொகுப்பில் கலந்து கொண்ட சிம்பு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, "இந்த படத்திற்காக தேசிங்கு பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார். தற்போது ஓடிடி மற்றும் சாட்லைட் மார்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே முன்வந்து தயாரிக்கலாம் என முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். ஏற்கனவே கமல் சாரை சந்தித்து இப்படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன" என தெரிவித்துள்ளார்.