கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
நடிகர் சிலம்பரசன் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரின் மூன்று படங்களின் அப்டேட் வெளியானது. அதில் ஒன்று தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவரது 50வது படமாக நடிக்கிறார். இந்த படத்தை அவரது ஆட்மேன் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரிக்கிறர்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஸ்பேஸ் தொகுப்பில் கலந்து கொண்ட சிம்பு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, "இந்த படத்திற்காக தேசிங்கு பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார். தற்போது ஓடிடி மற்றும் சாட்லைட் மார்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே முன்வந்து தயாரிக்கலாம் என முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். ஏற்கனவே கமல் சாரை சந்தித்து இப்படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன" என தெரிவித்துள்ளார்.