தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு | எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - துல்கர் சல்மான் | பிப்ரவரி 7ம் தேதி ஓடிடியில் 'கேம் சேஞ்ஜர்' | ‛குட் பேட் அக்லி' படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல் | 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வைபவின் ஆலம்பனா மார்ச் 7ல் ரிலீஸ் | மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரை மணி நேரத்தில் டியூன் போட்டேன் : ஜி.வி. பிரகாஷ் | பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது |
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரித்து கதாநாயகனாக 'காந்தா' என்கிற படத்தில் நடிக்கின்றார். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ஹன்ட் ஆப் வீரப்பன் என்ற வெப் தொடரின் கதையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். துல்கர் சல்மான் திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு காந்தா படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட துல்கர் சல்மான் அதன் உடன், "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில் நான் காலத்தால் அழியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதனை எனது 13வது திரைப்பயணத்தில் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இயக்குனர் கூறுகையில், "நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் 'காந்தா' படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம் துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்" என்றார்.