'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' |

கேரளாவில் கொச்சியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் மிஹிர் முகமது என்பவர் தனது சக மாணவர்கள் சிலரால் கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்பட்டு தாக்குதலுக்கும் ஆளாகி அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிகழ்வு கேரளாவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவையும் தாண்டி பல பிரபலங்கள் இறந்து போன மாணவனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வு குறித்து தங்களது கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “இந்த 2025ல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆணவம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதுபோன்று மனரீதியாக, உணர்வு ரீதியாக, சில சமயம் உடல் ரீதியான இது போன்ற துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை வெறும் இரங்கல்களுடன் கடந்து செல்ல கூடாது. நிச்சயம் நடவடிக்கை தேவை. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் அடி ஆழத்திலிருந்து விசாரிப்பார்கள் என நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.




