நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |
நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு 2016ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கியது. சுமார் 35 கோடியில் இந்த கட்டிடத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திரையரங்கம், திருமண மண்டபம், ஒளிப்பதிவு கூடங்கள், ஒலிப்பதிவு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள். நடிப்பு பயிற்சி மையம் ஆகியவை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
60% கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான வழக்குகள், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது வழக்குகள் முடிந்து நாசர் தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு கட்டிட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திட்டமிட்டதை விட கூடுதலாக 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் இன்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருகிற ஏப்ரல் மாதம் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
========