வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு 2016ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கியது. சுமார் 35 கோடியில் இந்த கட்டிடத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திரையரங்கம், திருமண மண்டபம், ஒளிப்பதிவு கூடங்கள், ஒலிப்பதிவு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள். நடிப்பு பயிற்சி மையம் ஆகியவை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
60% கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான வழக்குகள், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது வழக்குகள் முடிந்து நாசர் தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு கட்டிட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திட்டமிட்டதை விட கூடுதலாக 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் இன்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருகிற ஏப்ரல் மாதம் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
========




