மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருந்த படம் 'புறநானூறு'. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இருந்தாலும் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட 'புறநானூறு' படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் படம்தான் 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. நேற்று இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 1960களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றத்தையும், அவரது கதாபாத்திரத்தையும் நேற்றைய டீசர் மூலம் பார்த்த ரசிகர்கள் 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கோ மிகப் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யா 'மிஸ்' செய்திருக்கக் கூடாது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஒருவேளை ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் 'பராசக்தி' படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் இருக்கிறது.