வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாக இருந்த படம் 'புறநானூறு'. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் டிராப் ஆனது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. இருந்தாலும் இருவரும் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட 'புறநானூறு' படம் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்தப் படம்தான் 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. நேற்று இந்தப் படத்தின் டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. 1960களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றத்தையும், அவரது கதாபாத்திரத்தையும் நேற்றைய டீசர் மூலம் பார்த்த ரசிகர்கள் 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கோ மிகப் பெரும் வருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யா 'மிஸ்' செய்திருக்கக் கூடாது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். ஒருவேளை ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் 'பராசக்தி' படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம். ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் சூர்யா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் இருக்கிறது.