மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
தெலுங்கில் 'கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2' ஆகிய படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் தயாரான இப்படம் அடுத்த வாரம் பிப்ரவரி 7ம் தேதி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் இயக்குனரான சந்து மொன்டேட்டி அடுத்து சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'தண்டேல்' படத்தின் கதையைத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் சொன்ன போது சூர்யா, அல்லது ராம் சரண் நாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்க வாய்ப்பு தருவதாகச் சொன்னார். அப்படத்திற்காக அவர் 300 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார். தன் மீது அவ்வளவு நம்பிக்கையை அல்லு அரவிந்த் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.