ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்புரான்'. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மம்மூட்டி கலந்து கொண்டார்.
அப்போது பிரித்விராஜ் மேடையில் கூறுகையில், " லைகா நிறுவனர் சுபாஸ்கரண் என்னிடம் லைகா நிறுவனத்திற்காக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா ? என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், நான் ஒரு பகுதி நேர இயக்குனர். என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்கான கதையை தயார் செய்ய முடியாது என்பதால் அந்த படம் நடைபெறவில்லை. அதேசமயம் சுபாஸ்கரணுடன் நட்பு தொடர்ந்து இன்று எம்புரான் உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.