பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்புரான்'. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மம்மூட்டி கலந்து கொண்டார்.
அப்போது பிரித்விராஜ் மேடையில் கூறுகையில், " லைகா நிறுவனர் சுபாஸ்கரண் என்னிடம் லைகா நிறுவனத்திற்காக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா ? என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், நான் ஒரு பகுதி நேர இயக்குனர். என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்கான கதையை தயார் செய்ய முடியாது என்பதால் அந்த படம் நடைபெறவில்லை. அதேசமயம் சுபாஸ்கரணுடன் நட்பு தொடர்ந்து இன்று எம்புரான் உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.