மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டவர் நடிகர் பிரித்விராஜ். அதன்பிறகு இயக்குனராகும் ஆசையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து ‛லூசிபர்' என்கிற அரசியல் பின்னணி கொண்ட படம் இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி மலையாள சினிமாவில் முதலில் 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் பிறகு ‛ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கிய பிரித்விராஜ் மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ‛எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்கிற தகவலை தன்னை அறியாமலேயே சொல்லிவிட்டார் பிரித்விராஜ்.
லூசிபர் படத்தின் தொழில்நுட்பம் குறித்து அவர் பேசும்போது, “இந்த எம்பிரான் படத்திற்காக நான் வழக்கமான லென்ஸ்கள் எதையும் பயன்படுத்தவில்லை. இதற்கு பதிலாக இந்த படத்தின் மூன்று பாகங்களிலுமே அனமார்பிக்ஸ் என்கிற தொழில்நுட்பத்தில் 1:2:8 என்கிற விகிதாச்சார கணக்குப்படி காட்சிகளை படமாக்கி இருக்கிறேன். இது படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் தனது திறமையான பங்களிப்பை இதில் கொடுத்துள்ளார்” என்று பிரித்விராஜ் கூறியுள்ளார். “இதன் மூன்று பாகங்களிலுமே” என அவர் கூறியதன் மூலம் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்பது தற்போது உறுதியாகி உள்ளது.