ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் 'கெட்டிமேளம்' மற்றும் 'மனசெல்லாம்' என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு 'மனசெல்லாம்' தொடரும், இரவு 7.30 மணிக்கு 'கெட்டிமேளம்' தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மனசெல்லாம் தொடர் விருதுநகர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. குடும்பத் தலைவரான ராஜ சுந்தரம், தனது குடும்பத்தில் இரண்டு திருமணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார். அதில் ஒரு திருமணத்தின் மணப்பெண் ஒரு காதலில் இருப்பதால் இரு திருமணங்களுமே சிக்கலாகிறது. இதனை எப்படி சமாளித்து திருமணத்தை அவர் நடத்துகிறார் என்பது கதை. தீபக், ஜெய்பாலா மற்றும் வானதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் தொடரின் நாயகன் பொன்வண்ணன். நாயகி பிரவீணா. இவர்களுக்கு தங்களின் கனவு வீட்டை கட்டுவதும், தங்கள் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதும்தான் இலக்கு. அதை நோக்கி எப்படி பயணிக்கிறார்கள் என்பது கதை. சாயா சிங், சவுந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் மற்றும் விராத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.