பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாக கதைகளில் நடிக்க மறுத்துவிட்டார். என்றாலும் தற்போது நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினியை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்கப் போகிறார்கள். என்றாலும் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.