2026ல் துவங்கும் தனுஷின் மூன்று படங்கள் | ‛திருச்சிற்றம்பலம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன் | காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல் | 2026ல் ஐந்து ஹிந்தி படங்களில் நடிக்கும் தமன்னா | பெரிய படங்களின் வசூலை சுட்டிக்காட்டிய சிம்ரன்! | கைகூப்பி கேட்கிறேன்... ஆதரிக்காதீங்க : ஸ்ரீலீலா | சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி | தோழிகளுடன் இலங்கைக்கு டூர் சென்ற ராஷ்மிகா மந்தனா | பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி தந்த அப்டேட்! | தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்! |

நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாக கதைகளில் நடிக்க மறுத்துவிட்டார். என்றாலும் தற்போது நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினியை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்கப் போகிறார்கள். என்றாலும் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.