இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாக கதைகளில் நடிக்க மறுத்துவிட்டார். என்றாலும் தற்போது நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினியை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்கப் போகிறார்கள். என்றாலும் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.




