காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்ததாக சொல்லி படக்குழுவினர் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்கள். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும் ஆய்வு நடத்தியவர்கள் தற்போது கர்நாடக அரசு சார்பில் டாக்ஸிக் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.