கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்ததாக சொல்லி படக்குழுவினர் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்கள். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும் ஆய்வு நடத்தியவர்கள் தற்போது கர்நாடக அரசு சார்பில் டாக்ஸிக் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.