24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் |
தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு, 'புஷ்பா 2' தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இன்று 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்திற்காக அவர் லாபத்தில் சில சதவீதம் வருவாயாகப் பெற்றதாக செய்திகள் வந்தன. அப்படம் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதாகவும் அதனால்தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
'புஷ்பா' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரது வீடுகளைத் தொடர்ந்து அதில் நடித்துள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகத் தெரிகிறது.