கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு, 'புஷ்பா 2' தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இன்று 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்திற்காக அவர் லாபத்தில் சில சதவீதம் வருவாயாகப் பெற்றதாக செய்திகள் வந்தன. அப்படம் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதாகவும் அதனால்தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
'புஷ்பா' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரது வீடுகளைத் தொடர்ந்து அதில் நடித்துள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகத் தெரிகிறது.