சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர் | சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை |

தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு, 'புஷ்பா 2' தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இன்று 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்திற்காக அவர் லாபத்தில் சில சதவீதம் வருவாயாகப் பெற்றதாக செய்திகள் வந்தன. அப்படம் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதாகவும் அதனால்தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
'புஷ்பா' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரது வீடுகளைத் தொடர்ந்து அதில் நடித்துள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகத் தெரிகிறது.