சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். சில நாட்களுக்கு முன்பு தன் மீது சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சொல்லி 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த பிரபலமான நகைக்கடை உரிமையாளர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து 6 நாட்களில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.
இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி மற்றும் சூப்பரின்டென்ட் இருவரும் இவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து, சலுகைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக இவரை சந்திக்க வந்த மூன்று நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.