ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். சில நாட்களுக்கு முன்பு தன் மீது சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சொல்லி 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த பிரபலமான நகைக்கடை உரிமையாளர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து 6 நாட்களில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.
இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி மற்றும் சூப்பரின்டென்ட் இருவரும் இவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து, சலுகைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக இவரை சந்திக்க வந்த மூன்று நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.