7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். சில நாட்களுக்கு முன்பு தன் மீது சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சொல்லி 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த பிரபலமான நகைக்கடை உரிமையாளர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து 6 நாட்களில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.
இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி மற்றும் சூப்பரின்டென்ட் இருவரும் இவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து, சலுகைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக இவரை சந்திக்க வந்த மூன்று நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.