காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பல கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தரும் என எதிர்பார்த்த நிலையில் சில கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தருகிறது. இப்படி நடப்பது தெலுங்குத் திரையுலகத்தில். விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளிவந்தன.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க 'சங்கராந்திகி வஸ்துனம்'. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.