காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது 15 ஆண்டு காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பிறகும் தான் நடித்த படங்களின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், கணவருடன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பினார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அதோடு நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது. என்றாலும் அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.




