நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்கள் யோகி பாபு. அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் அவரை பார்க்க முடிகிறது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்துடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு தனது கழுத்திலும், கையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சில கயிறுகளையும் அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்களே.. என்ன காரணம்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு யோகி பாபு, ''இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம். அதோடு இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி'' என்றும் ஒரு நறுக் பதில் கொடுத்தார் யோகி பாபு.