ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்கள் யோகி பாபு. அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் அவரை பார்க்க முடிகிறது. தான் மட்டுமின்றி தனது குடும்பத்துடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு தனது கழுத்திலும், கையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சில கயிறுகளையும் அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்களே.. என்ன காரணம்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு யோகி பாபு, ''இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம். அதோடு இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி'' என்றும் ஒரு நறுக் பதில் கொடுத்தார் யோகி பாபு.