ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தில் சமீப வருடங்களில் 500 கோடி, 1000 கோடி வசூல் என்பது பரபரப்பாக உள்ளது. கடந்த வருடம் வெளியான 'புஷ்பா 2' படம் 1800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மற்றும் சமீபத்தில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் தயாரிப்பாளர்கள், நிறுவனத்தின் முக்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை பரபரப்பாகப் பேசி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிளி ஹில்ஸ், கொன்டாபுர், கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளி இவர். தற்போது தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.