பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
தெலுங்குத் திரையுலகத்தில் சமீப வருடங்களில் 500 கோடி, 1000 கோடி வசூல் என்பது பரபரப்பாக உள்ளது. கடந்த வருடம் வெளியான 'புஷ்பா 2' படம் 1800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மற்றும் சமீபத்தில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் தயாரிப்பாளர்கள், நிறுவனத்தின் முக்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை பரபரப்பாகப் பேசி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிளி ஹில்ஸ், கொன்டாபுர், கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளி இவர். தற்போது தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.