விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட வித்தியாசமான ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ' விடாமுயற்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, " ஒரு சமயத்தில் நடிகர் விஜயிடம் மூன்று கதைகளைக் கூறினேன். அவருக்கு மூன்று கதைகளும் பிடித்தது. அதில் ஒரு படத்தின் கதையை என்னையே தேர்வு செய்ய சொன்னார். நானும் தேர்வு செய்து கூறினேன். அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை முடித்து பின் அடுத்த படத்தினை இயக்க செல்லுங்கள் என்றார். இதனால் தான் அந்த சமயத்தில் விஜய் படம் நடைபெறவில்லை. இன்னும் விஜய்க்கு அந்த மூன்று கதைகளும் காத்திருக்கிறது" என தெரிவித்தார்.