சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட வித்தியாசமான ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ' விடாமுயற்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, " ஒரு சமயத்தில் நடிகர் விஜயிடம் மூன்று கதைகளைக் கூறினேன். அவருக்கு மூன்று கதைகளும் பிடித்தது. அதில் ஒரு படத்தின் கதையை என்னையே தேர்வு செய்ய சொன்னார். நானும் தேர்வு செய்து கூறினேன். அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை முடித்து பின் அடுத்த படத்தினை இயக்க செல்லுங்கள் என்றார். இதனால் தான் அந்த சமயத்தில் விஜய் படம் நடைபெறவில்லை. இன்னும் விஜய்க்கு அந்த மூன்று கதைகளும் காத்திருக்கிறது" என தெரிவித்தார்.