எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட வித்தியாசமான ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ' விடாமுயற்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, " ஒரு சமயத்தில் நடிகர் விஜயிடம் மூன்று கதைகளைக் கூறினேன். அவருக்கு மூன்று கதைகளும் பிடித்தது. அதில் ஒரு படத்தின் கதையை என்னையே தேர்வு செய்ய சொன்னார். நானும் தேர்வு செய்து கூறினேன். அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை முடித்து பின் அடுத்த படத்தினை இயக்க செல்லுங்கள் என்றார். இதனால் தான் அந்த சமயத்தில் விஜய் படம் நடைபெறவில்லை. இன்னும் விஜய்க்கு அந்த மூன்று கதைகளும் காத்திருக்கிறது" என தெரிவித்தார்.