பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார் | தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு | எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - துல்கர் சல்மான் | பிப்ரவரி 7ம் தேதி ஓடிடியில் 'கேம் சேஞ்ஜர்' | ‛குட் பேட் அக்லி' படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல் | 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வைபவின் ஆலம்பனா மார்ச் 7ல் ரிலீஸ் | மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரை மணி நேரத்தில் டியூன் போட்டேன் : ஜி.வி. பிரகாஷ் | பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' |
‛ராயல் ஸ்டாக் பூம்பாக்ஸ்' பெயரில் மும்பையில் இசை திருவிழா நடப்பது வழக்கம். மூன்றாம் ஆண்டு விழா அறிமுக நிகழ்வில் பாலிவுட் இசை துறையை சேர்ந்த அர்மான் மாலிக், அமித் திரிவேதி, நீத்தி மோகன், நிகிதா காந்தி, வேகம், இக்கா மற்றும் டி.ஜே.யோகி போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர், பாடகர் அமித் திரிவேதி, “என்னைப் பொறுத்தவரை, கதைகளை ட்யூன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களுடன் ஆழமாக இணைக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றது மகிழ்ச்சி'' என்றார்.
பாடகர் அர்மான் மாலிக் கூறுகையில், "இசை எப்போதுமே மக்களுடன் சேர ஒரு வழியாகும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த மொழி பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நகரத்திலும் மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களைச் சந்திக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசை எல்லோரையும் எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை உணர முடிகிறது'' என்றார்.
பாடகி நீத்தி மோகன் பேசுகையில், "உலகின் மொழியாக எப்போது இசை இருக்கிறது. இது மக்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தளம் கலைஞர்களுக்கு ஒரு அருமையான இடமாகும். இங்கு ரசிகர்களுடன் இசை கலைஞர்கள் இன்னும் ஆழமாக இணைத்து கொள்ள முடியும். பல்வேறு இசை டியூன்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணமாக உள்ளது'' என்றார்.