பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பந்த்ராவில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதியர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சைப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். இதை பார்த்த நடிகர் சைப் அலிகானை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சைப் அலிகானுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவர் கூறுகையில், 'அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில், 2 இடங்களில் பலத்த காயமாகும். முதுகு எலும்பு பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது', என்றார்.
பாலிவுட் நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் ஹிந்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு நடிகர் சைப் அலிகான் ஆவார். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். தாயார் பிரபல நடிகை சர்மிளா தாகூர்.