'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

‛ராயல் ஸ்டாக் பூம்பாக்ஸ்' பெயரில் மும்பையில் இசை திருவிழா நடப்பது வழக்கம். மூன்றாம் ஆண்டு விழா அறிமுக நிகழ்வில் பாலிவுட் இசை துறையை சேர்ந்த அர்மான் மாலிக், அமித் திரிவேதி, நீத்தி மோகன், நிகிதா காந்தி, வேகம், இக்கா மற்றும் டி.ஜே.யோகி போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர், பாடகர் அமித் திரிவேதி, “என்னைப் பொறுத்தவரை, கதைகளை ட்யூன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களுடன் ஆழமாக இணைக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றது மகிழ்ச்சி'' என்றார்.
பாடகர் அர்மான் மாலிக் கூறுகையில், "இசை எப்போதுமே மக்களுடன் சேர ஒரு வழியாகும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த மொழி பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நகரத்திலும் மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களைச் சந்திக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசை எல்லோரையும் எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை உணர முடிகிறது'' என்றார்.
பாடகி நீத்தி மோகன் பேசுகையில், "உலகின் மொழியாக எப்போது இசை இருக்கிறது. இது மக்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தளம் கலைஞர்களுக்கு ஒரு அருமையான இடமாகும். இங்கு ரசிகர்களுடன் இசை கலைஞர்கள் இன்னும் ஆழமாக இணைத்து கொள்ள முடியும். பல்வேறு இசை டியூன்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணமாக உள்ளது'' என்றார்.