நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் இந்த பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நித்யா மேனன். அப்போது அவர் அடுத்து தனுஷ் இயக்கத்தில் நடித்து வரும் 'இட்லி கடை' படத்தை குறித்து கேள்வி எழுந்தது.
அதற்கு, நித்யா மேனன் கூறியதாவது, " காதலிக்க நேரமில்லை படத்திற்கு நேர் எதிர்மறையாக 'இட்லி கடை' படம் இருக்கும். அப்படத்திற்காக ஆர்வமாக இருக்கிறேன். எதையுமே திட்டமிடாமல் இருக்கும்போது, அது தானாக நடக்கும். அப்படமும் இதே ஆண்டில் வெளியாகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. அப்படியொரு கதாபாத்திரத்தில் என்னை பார்ப்பீர்கள், யாராலும் யூகிக்கவே முடியாது. நித்யா மேனனை இப்படியும் பார்க்கலாமா என்று இருக்கும். ரொம்பவே உணர்ச்சிகரமான, எமோஷனலான படம். அப்படம் பார்த்தவர்கள் அழுதுவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.