ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னனி நடிகராக வலம் வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், " சினிமா துறையில் என்னை போன்ற சாதாரண மனிதர்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சிலருக்கு அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று கேட்டனர். இன்னும் சிலர் என் முகத்துக்கு நேராகவே இந்த துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டனர். அவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்வதில்லை. சிரித்துக் கொண்டே கடந்துவிடுகிறேன். என்னுடைய வெற்றியின் மூலம் அவர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. ஏனெனில், என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது. வெற்றியோ தோல்வியோ என்னை கொண்டாடும் என் ரசிகர்களுக்கானது.
உங்களை போல நாங்களும் வர வேண்டும் அண்ணா என்று சொல்லும் மக்களுக்கானது. கடந்து செல்வது மட்டுமே அவர்களை கையாள்வதற்கான ஒரே வழி. இன்னும் சிலர் சமூக வலைதளங்களில் என் படம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் நான் தான் என்று கூறி என்னை தாக்குவார்கள். ஆனால், என் படம் வெற்றி அடைந்தால் என்னை தவிர மற்ற எல்லாரையும் பாராட்டுவார்கள்” என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.