ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ' அமரன்'. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரியஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி பான் இந்தியா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிறுவனம் ஹிந்தியில் அட்ராங்கி ரே, அனிமல், கபீர் சிங், ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.