வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ' அமரன்'. சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி சீரியஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி பான் இந்தியா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிறுவனம் ஹிந்தியில் அட்ராங்கி ரே, அனிமல், கபீர் சிங், ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.