ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழில் நடிகர் கலையரசன் மெட்ராஸ் படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு அதே கண்கள், குதிரைவால், ஹாட் ஸ்பாட், ராஜா மந்திரி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார். இது அல்லாமல் சார்பட்டா பரம்பரை, கபாலி, ஜகமே தந்திரம், வாழை, தேவரா உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதில் பெரும்பாலான படங்களில் அவர் கதாபாத்திரம் இறந்து போகும் கதாபாத்திரமாக உள்ளதால் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கலையரசன் கதாபாத்திரம் வந்தாலே இறந்து விடும் என மீம்ஸ் உருவாக்கி கலாய்த்தனர்.
இந்த நிலையில் மெட்ஸ்காரன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கலையரசன் மேடையில் கூறுகையில், "ஒரு படத்தின் கதையை உருவாக்கி எழுதி வரும் போதே ஒரு கதாபாத்திரம் சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் போல, இனி நான் இரண்டாம் கட்ட நாயகனாக நடிக்க மாட்டேன். முதன்மை கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்" என்றார்.