பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குனரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது பரபரப்பானது.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தெலுங்கு நடிகர் சங்கத்தில் இக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்டநாட்களுக்கு முன் புகார் அளித்தேன். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கிய அவரை திரைத்துறையினர் ஆதரிக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் மீது பூனம் கூறிய குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தெலுங்கு நடிகர் சங்கம் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளது.




