அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? |

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குனரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது பரபரப்பானது.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தெலுங்கு நடிகர் சங்கத்தில் இக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்டநாட்களுக்கு முன் புகார் அளித்தேன். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கிய அவரை திரைத்துறையினர் ஆதரிக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் மீது பூனம் கூறிய குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தெலுங்கு நடிகர் சங்கம் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளது.




