ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குனரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது பரபரப்பானது.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தெலுங்கு நடிகர் சங்கத்தில் இக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்டநாட்களுக்கு முன் புகார் அளித்தேன். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கிய அவரை திரைத்துறையினர் ஆதரிக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் மீது பூனம் கூறிய குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தெலுங்கு நடிகர் சங்கம் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளது.