ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது ‛பேபி ஜான்' படம் மூலம் ஹிந்தியிலும் நுழைந்துள்ளார். இதற்கிடையே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டார். சுமார் 15 வருடங்கள் காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் செய்தனர்.
இந்நிலையில் தனது 15 ஆண்டு காதல் குறித்து சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி: எங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்கவே விரும்பினேன். யாருக்கும் தெரியாது. சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். சமந்தா, ஜெகதீஷ் ஆகியோருக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். இயக்குனர் அட்லி, பிரியா, நடிகர் விஜய், நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்ய லட்சுமி, எங்கள் நண்பர்கள் என சினிமா துறையில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். நான் மற்றும் ஆண்டனி இருவரும் எங்கள் சொந்த விஷயங்களை முடிந்தவரை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறோம். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருப்பார்.
நான் 12ம் வகுப்பு படிக்கும் போது ஆர்குட்டில் ஆண்டனியை பாலோ செய்தேன். அவர் என்னை விட ஏழு வயது மூத்தவர். அப்போது அவர் கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு மாதம் ஆர்குட்டில் நன்றாக சாட் செய்தோம், பிறகு ஒரு உணவகத்தில் சந்திக்க சென்றபோது, நான் என் குடும்பத்தினருடன் இருந்தேன், அதனால் அவரிடம் பேச முடியவில்லை. அதனால் அவருக்கு கண்ணடித்து விட்டுச் சென்றேன். பிறகு, 'தைரியம் இருந்தால் எனக்கு காதலைச் சொல்லுங்க' என்று சொன்னேன். 2010ல் முதன் முதலில் என்னிடம் காதலைச் சொன்னார். 2016ல் எங்கள் உறவு மேலும் நெருக்கமானது. திருமணம் வரை கழற்றக் கூடாது என்று ஒரு மோதிரம் கொடுத்தார். என்னுடைய எல்லா படங்களிலும் அந்த மோதிரத்தைப் பார்க்கலாம்.
எங்களது திருமணம் ஒரு கனவு மாதிரி இருந்தது. ஏனென்றால் நாங்கள் ஓடிப்போகலாம் என்றுகூட கெட்ட கனவுகளைக் கண்டிருக்கிறோம். என்னுடைய இதயம் நிறைந்திருந்தது, இது எங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம். எங்கள் உறவு ஆறு வருடங்கள் தொலைதூரத்தில் இருந்தது. எங்களை ரொம்பவே நெருக்கமாக்கியது என்றால் கொரோனா காலகட்டம்தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இவர் எனக்கு கணவராக கிடைத்தது அதிர்ஷ்டம். இவ்வாறு அவர் கூறினார்.