இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பின்னர் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், அந்த கேப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நடிக்க தொடங்கினார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டு படங்களுக்குமே அஜித் குமார் டப்பிங் பேசி விட்டார்.
இப்படியான நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திடீரென்று பின்வாங்கி விட்டது. இதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தை தொடங்கியபோதே பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்ததால், விடாமுயற்சிக்கு பதிலாக பொங்கல் தினத்தில் குட் பேட் அக்லி திரைக்கு வருமா என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நேரத்தில் அப்பட வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, குட் பேட் அக்லி படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போதும், இன்னும் ஓரிரு தினங்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் குட் பேட் அக்லி திரைக்கு வரும் என்கிறார்கள். அதனால் பொங்கல் ரிலீஸில் இருந்து விடாமுயற்சி பின்வாங்கி விட்ட நிலையில், அந்த இடத்தை குட் பேட் அக்லி படம் நிரப்புவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.