‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் அஜித் தற்போது ஒரே சமயத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசியில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அஜித் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார். அதே சமயம் குட் பேட் அக்லி படமும் இன்னொரு பக்கம் முடிந்து விட்டது. அஜித்தின் குடும்பம் தற்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வீடியோவும் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.