கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நடிப்பு தாண்டி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். சென்னையில் 'விஜய் ஆண்டனி 3.0' என்ற பெயரில் இன்று(டிச., 28) ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இவரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால் காவல்துறையின் அறிவுரையின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என சர்ச்சையானது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது.