மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என பன்முகம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நடிப்பு தாண்டி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார். சென்னையில் 'விஜய் ஆண்டனி 3.0' என்ற பெயரில் இன்று(டிச., 28) ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் இவரின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால் காவல்துறையின் அறிவுரையின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள், போக்குவரத்து நெரிசல் என சர்ச்சையானது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது.