புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்க தகுந்த படங்களை 'குடும்ப படம்' என்று குறிப்பிடுவார்கள். குடும்பமே சேர்ந்து நடித்த படத்தையும் குடும்ப படம் என்று சொல்லலாம். பிற்காலத்தில் அப்படியான படங்கள் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னோடியான படம் 'காமதேனு'.
1941ம் ஆண்டு அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் தம்பி கே.விஸ்வநாதன். அப்போது அவர் தியேட்டர் நடத்திக் கொண்டிருந்தார். தனது மனைவி வத்சலாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருப்பதை கண்டுகொண்ட விஸ்வநாதன் அவரது ஆசையை தீர்த்து வைக்க ஒரு படம் தயாரிக்க விரும்பினார். இதை தன் அண்ணனிடம் சொன்னபோது அவரும் ஏற்றுக் கொண்டார். விஸ்வநாதன் கொண்டு வந்த கதைக்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்து அப்போது பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நந்லால் ஜஸ்வந்த்தாலை அந்த படத்தை இயக்க வைத்தார்.
படத்தில் கே.விஸ்வநாதன் நாயகனாக நடிக்க, அவரது மனைவி வத்சலா நாயகியாக நடித்தார். அவர்களது ஒரே மகள் பேபி சரோஜா குழந்தை நட்சத்திரமாக அதாவது அவர்களது மகளாக நடித்தார். இவர்கள் தவிர ஜி.பட்டு ஐயர், ஜி.சுப்புலட்சுமி, எம்.ஆர்.எஸ். மணி, கே.என். கமலம், எஸ்.வி. வெங்கடராமன் மற்றும் எஸ்.பாலசந்தர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதற்கு பிறகு படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான பேபி சரோஜா பல படங்களில் நடித்து அன்றைக்கு நாயகன், நாயகிகளுக்கு இணையான சம்பளம் பெறும் குழந்தை நட்சத்திரமாக மாறினார்.