படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகாக குடும்பம் நடத்தும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றிற்காக படங்களில் நடிப்பதை தவிர்த்த ஜோதிகா, குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு தற்போது செலெக்ட்டிவான நல்ல கதையைம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை முன்னிட்டு மும்பைக்கு குடி பெயர்ந்து உள்ளனர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.
பெரும்பாலும் நட்சத்திரங்கள் தங்களது குழந்தைகளை வெளியுலகுக்கு அவ்வளவாக காட்டுவதை விரும்புவதில்லை. சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் புகைப்படங்கள் எப்போதாவது ஒருமுறை தான் மீடியாக்களில் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற சூர்யா - ஜோதிகா இருவரும் தியா, தேவ் இருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமல்ல புகைப்படக்காரர்கள் தங்களை புகைப்படம் எடுப்பதற்கு அழகாக பொறுமையாக போஸும் கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.