விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசு விண்ணப்பத்தில் சன்னி லியோன் பெயரும் குறிப்பிட்டு ஆன்லைனில் வங்கி கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களை பெற்று வந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.
சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த சன்னி லியோன் இது குறித்து வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கரில் என் பெயரையும், என் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு பயனளிக்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.