கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான ஷியாம் பெனகல் நேற்று(டிச., 23) காலமானார். திரைப்படத்துறையின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் சுயாதீன படங்களின் மூலம் மக்களை கவர்ந்தவர். சுயாதீன படங்களையும் வசூல் குவிக்கும் படங்களாக மாற்றியவர்.
ஆங்கூர் (1973), நிஷந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977), மம்மோ (1994), சர்தாரி பேகம் (1996), ஜுபைதா (2001) ஆகியன இவரது முக்கிய படைப்புகளாக கருதப்படுகின்றன. பல குறும்படங்களையும், தொடர்களையும் தயாரித்துள்ளார். இயக்கிய படங்கள் குறைவுதான் ஆனால் பெற்ற விருதுகள் அதிகம், இந்திய அரசின் பத்மஶ்ரீ (1976), பத்மபூஷண் (1991) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். 7 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
1976ம் ஆண்டு இவர் இயக்கிய 'மந்தன்' படம் பல சுவாரஸ்யங்களை கொண்டது. இந்த திரைப்படத்தின் கதையை இவரும், இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை என்று கூறப்படும் வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர். கூட்டுறவு இயக்கங்கள் எத்தகைய வெற்றியை தரும் என்பதை வர்கீஸ் குரியன் நடத்திய வெண்மைப் புரட்சி இயக்கம் நடைமுறையில் காட்டியது. இந்திய மக்கள் பாலுக்கு அலைந்த நிலை மாறி பால் தாராளமாக கிடைக்கும் நிலை இந்த புரட்சியின் மூலம் உருவானது.
இதை அடிப்படையாக வைத்துதான் 'மந்தன்' படம் உருவானது. இந்த படத்தை தயாரிக்க பணம் இல்லாமல் ஷியாம் தவித்தபோது குஜராத் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 5 லட்சம் பேரும் தலா இரண்டு ரூபாயை நன்கொடையாக வழங்கினர். 10 லட்சம் ரூபாயில் படம் உருவானது.
சுமிதா பட்டீல், கிரிஷ் கர்நாட், நஸ்ருதீன் ஷா, அம்ரீஷ் புரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கோவிந்த் நிஹலானி ஒளிப்பதிவு செய்திருந்தார், வன்ராஜ் பாட்டியா இசை அமைத்திருந்தார். படம் 3 தேசிய விருதுகளை பெற்றது.
குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எப்படி பால் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள், அதற்கு பண்ணை முதலாளிகளால் ஏற்பட்ட தடை என்ன? கெடா மாவட்ட கிராமங்களில் உருவான பால் உற்பத்தியாளர் சங்கம் எப்படி மாநில அளவில் விரிவடைந்தது என்பதை சுவாரஸ்மான கதை ஒன்றில் மூலம் சொல்வதுதான் இந்த படம். படத்தை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு சென்று பார்த்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தை தயாரிக்க உதவிய 5 லட்சம் பேரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களே என்று ஷியாம் பெனகல் அறிவித்தார்.