பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அமீர் கான், 'சித்தாரே ஜமீன் பர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‛கூலி' படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துள்ளார். சித்தாரே ஜமீன் பர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "எனது இளம் வயதில் புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நான் இரவு முழுவதும் கூட மது அருந்தி இருக்கிறேன். அது நல்லதுக்கு அல்ல என எனக்கு தெரிந்தும் கூட என்னால் அப்போது மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. ஆனால், இப்போது மது அருந்தும் பழக்கத்தை முழுவதுமாக கைவிட்டேன்" என அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் அமீர் கான்.