கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டேவும், முக்கிய வேடங்களில் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். தற்காலிகமாக சூர்யா 44 என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில் இன்று(டிச., 25) கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்த படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைத்துள்ளதாக அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
2:15 நிமிடம் ஓடும் இந்த அறிமுக வீடியோவில் குளக்கரையில் சூர்யாவின் கைகளில் காப்பு உடன் கயிறு போன்ற ஒன்றை அணிவிக்கிறார் பூஜா ஹெக்டே. அவரிடத்தில், ‛‛கோபத்தை கம்மி பண்ணுகிறேன், என் அப்பா உடன் வேலை பார்ப்பதை விடுறேன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசத்தை விட்டுறேன், சிரிக்க, சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன், இனி காதல், பரிசுத்த காதல் மட்டும் தான்... கட் அண்ட் ரைட்டாக சொல்றேன்... இப்ப நீ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா டி...'' என சூர்யா தெரிவிக்கிறார்.
இதை வைத்து பார்க்கையில் அப்பா உடன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்யும் சூர்யா, பூஜா ஹெக்டேவிற்காக அதையெல்லாம் விட்டுவிட்டு காதலில் இறங்கும் கதையாக இருக்கும் என தெரிகிறது.