சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவின் முதல் ஆந்தாலஜி படம் 'சிரிக்காதே'. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதும். அதே பாணியில் அடுத்து வந்த படம் 'மணிமாலை'. இதில் 4 காமெடி கதைகள் இடம் பெற்றது. 'ஆஷாடபூபதி' என்ற கதையில் பி.பி.ராகவாச்சாரியும், ஜெயாவும் நடித்திருந்தனர். 'அபூதி அடிககள்' என்ற கதையில் பி.பி.ரங்காச்சாரியும் டி.என்.மீனாட்சியும் நடித்திருந்தனர். 'மைனரின் காதல்' என்ற கதையில் டி.எஸ்.துரைராஜும், கே.எஸ்.ஆதிலட்சுமியும் நடித்திருந்தனர், 'நவீன மார்கண்டேயன்' படத்தல் காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது 'மணிமாலை'.