கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவின் முதல் ஆந்தாலஜி படம் 'சிரிக்காதே'. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதும். அதே பாணியில் அடுத்து வந்த படம் 'மணிமாலை'. இதில் 4 காமெடி கதைகள் இடம் பெற்றது. 'ஆஷாடபூபதி' என்ற கதையில் பி.பி.ராகவாச்சாரியும், ஜெயாவும் நடித்திருந்தனர். 'அபூதி அடிககள்' என்ற கதையில் பி.பி.ரங்காச்சாரியும் டி.என்.மீனாட்சியும் நடித்திருந்தனர். 'மைனரின் காதல்' என்ற கதையில் டி.எஸ்.துரைராஜும், கே.எஸ்.ஆதிலட்சுமியும் நடித்திருந்தனர், 'நவீன மார்கண்டேயன்' படத்தல் காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது 'மணிமாலை'.