கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‛வேட்டையன்'. கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதித்தது.
இதுபற்றி ஞானவேல் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சினிமா படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. வேட்டையன் படம் மோசம் என முதல்நாளில் இருந்தே சொல்ல ஆரம்பித்தனர். இதனால் படம் பார்ப்பவர்கள் மனநிலையும் அப்படி மாறிவிடுகிறது. அந்தவகையில் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்போது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.