ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‛வேட்டையன்'. கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதித்தது.
இதுபற்றி ஞானவேல் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சினிமா படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. வேட்டையன் படம் மோசம் என முதல்நாளில் இருந்தே சொல்ல ஆரம்பித்தனர். இதனால் படம் பார்ப்பவர்கள் மனநிலையும் அப்படி மாறிவிடுகிறது. அந்தவகையில் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்போது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.