தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயன்கர் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக எந்தவொரு படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் விஜய் சேதுபதி.




