விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தார். அண்மையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறப்பு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேத்ரனுடன் நடித்த நண்பர்களும், சில நடிகர்களும் நேத்ரனின் நல்ல குணத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். 
இதற்கிடையில் நேத்ரனின் மகள் அபிநயா மிக சமீபத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். அவர் தற்போது தனது அப்பாவின் பழைய புகைப்படங்களை ஷேர் செய்து எமோஷ்னலான பதிவினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் நேத்ரனை ஹீரோவாக பார்க்க தவறவிட்டதை துர்பாக்கியம் என கூறி வருந்தி வருகின்றனர்.