தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… |

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடி, இரண்டாம் நாளில் 449 கோடி, மூன்றாம் நாளில் 621 கோடியாக வசூலித்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தின் வசூல் உயர்ந்து அதிகமாக வசூலித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது பட நிறுவனம். அது மட்டுமல்ல இரண்டரை நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக இப்படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்று திங்கள் கிழமை வார நாளின் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பி இருக்கிறது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலைத் தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களின் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.