பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். பலவருடங்களாக திரையில் பயணித்து வரும் இவருக்கு பாக்கியலெட்சுமி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடியும், பாக்கியலெட்சுமி சீரியல் குறித்து பல அப்டேட்டுகளையும் கொடுத்து வந்த இவர் ஒரு சில முறை சீரியலை விட்டு விலகுவதாகவும், பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறி இருக்கிறார். அப்படியிருக்க, 5 வருடங்களுக்கு மேல் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலெட்சுமி தொடர் சமீபகாலங்களில் சற்று சுமாராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சதீஷ் வெளியிட்ட வீடியோவில் சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்பது போல் கூறியிருந்தார். இதனையடுத்து சீரியலுக்கு எண்ட் கார்டு என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சதீஷ் மற்றொரு வீடியோவில் தான் சொன்னதை தவறாக மக்கள் புரிந்து கொண்டதாகவும் தற்போதைக்கு சீரியல் முடிய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் 'என்னங்க இவரு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கார்' என கலாய்க்கின்றனர்.




