'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று(நவ., 29) காலமாகி உள்ளார். இது சமந்தா மற்றும் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவு பற்றி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மீண்டும் நாம் சந்திக்கும் வரை அப்பா..." என்று உடைந்த இதய ஈமோஜியுடன் உருக்கமாக மனமுடைந்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
கணவர் நாகசைதன்யா உடன் பிரிவு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்து துயரங்களை எதிர்கொண்டு வரும் சமந்தா இப்போது பெரும் துயரமாக தனது தந்தையை இழந்துள்ளார். இதையடுத்து சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.