ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தரவில்லை. அதோடு அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தனுஷை கடுமையாக விமர்சித்தார். மேலும் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில்பொய் சொல்லி ஒருத்தரின் வாழ்க்கையை நீங்கள் அளிக்கும்போது அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த கடன் வட்டியுடன் உங்களுக்கு திரும்பி வரும். கர்மா ஒருபோதும் விடுவதில்லை என்று கோடிட்டு காட்டியுள்ளார் நயன்தாரா.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து தனுஷை தான் மறைமுகமாக இப்படி அவர் சாடி உள்ளார் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.