திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தரவில்லை. அதோடு அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தனுஷை கடுமையாக விமர்சித்தார். மேலும் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில்பொய் சொல்லி ஒருத்தரின் வாழ்க்கையை நீங்கள் அளிக்கும்போது அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த கடன் வட்டியுடன் உங்களுக்கு திரும்பி வரும். கர்மா ஒருபோதும் விடுவதில்லை என்று கோடிட்டு காட்டியுள்ளார் நயன்தாரா.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து தனுஷை தான் மறைமுகமாக இப்படி அவர் சாடி உள்ளார் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.